கொல்கத்தா, ஜூலை01 மேற்குவங்காளத்தில் அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதுகொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுவருகின்றனஇதற்கிடையில், மேற்கு வங்காள மாநிலத்தில் கொரோனவைரஸ் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கை ஜூலை 31வரை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படுவதாகவும் அமல்படுத்தப்பட உள்ள மணி முதல் 10 மணி வரை சில தளர்வுகள் இருக்கும் என்றும் எஞ்சிய நேரங்களில் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என்றும் அம்மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி அண்மையில் அறிவித்தார். இந்நிலையில் மேற்குவங்காளத்தில் அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை எழை மக்களுக்கு இலவசரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்மந்திரிமம்தா பானர்ஜி செவ்வாய்கிழமை அறிவித்துள்ளார். இதையடுத்து ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளாக பொதுமக்கள் காலையில் 5.30 மணி முதல் 8.30 மணி வரை வாக்கிங் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்ஆனால், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்றும், திருமண விழாவில் 50 பேர் கலந்துகொள்ளவும்இறுதிச் சடங்கில் 25 பேர் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்
மேற்குவங்காளத்தில் அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்: முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு