புதுடெல்லி, ஜூன் 30 கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி விமர்சித்துள்ளார். நாடுமுழுவதும்கடந்த 7ம் தேதியிலிருந்து பெட்ரோல்டீசல்விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. கடந்த 3 வாரங்களில் 22 முறை பெட்ரோல், டீசல் விலைமக்களை அதிகரிக்கப்பட்டுள்ளதுஇதுவரைபெட்ரோல்லிட்டருக்கு ரூ.9.17 பைசாவும், டீசல் லிட்டருக்குரூ.11.14 பைசாவும் விலை அதிகரித்துள்ளதுஇந்த விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வைத் திரும்பப்பெறக்கோரியும் காங்கிரஸ்கட்சிசார்பில் நாடு மமவதும் திங்கட்கிழமை ஆர்பாட்டம் நடத்தப்பட்டதுஇந்நிலையில்காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி காணொலி மூலம் பேசி பெட்ரோல்டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்தெரிவித்துள்ளார்இதுதொடர்பாகவீடியோ ஒன்றில் பேசியதாவது: விலைமக்களை ஒருபுறம் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பெரும் துன்பத்தில் ஆழ்த்துகிறது மற்றொருபுறம் மத்திய அரசுபெட்ரோல்டீசல் விலையை உயர்த்தி அவர்களின் வாழ்க்கையை மேலும் சிரமத்தில் தள்ளுகிறதுகொரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் காலத்தில் பெட்ரோல், டீசல் மீது ஏற்றப்பட்டவிலையை உயர்வை மத்தியில் ஆளும் மோடி அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று நானும், காங்கிரஸ் தொண்டர்களும் ஒன்றாகச் சேர்ந்துவலியுறுத்துகிறோம். கச்சா எண்ணெய் விலை குறைவின் பயன்களை பிரதமா மோடி தலைமையிலான அரசுசாமானிய மக்களுக்கு வழங்கவில்லைபெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி ஆதாயம் அடைவதற்கும், லாபம் சம்பாதிப்பதற்கும் இதுநேரம் அல்ல என்றும் கடினமான சூழலில் பொதுமக்களை ஆதிரிப்பதே * அரசின் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வால் நாட்டில் உள்ள விவசாயிகள், ஏழைகள், உழைக்கும் மக்கள், நடுத்தரக் குடும்பத்தினர், சிறு வியாபாரிகள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்
-ராகுல் காந்தி விமர்சனம் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் பெட்ரோல், டீசல்விலைகடும் உயர்ந்துள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இதுகுறித்து கூறுகையில், "கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் இதுவரை இல்லாத அளவு குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத அளவு உயர்த்தப்பட்டுள்ளதுகச்சா எண்ணெய் விலை குறையும்போது நீங்கள் ஏன் விலையை உயர்த்துகிறீர்கள். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.