சென்னை , ஜூலை01 பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் ஜூலை 28ஆம்தேதி வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் ஜூலை 28ஆம்தேதி வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல் போக நன்செய்பாசனத்திற்குதண்ணீர் திறந்துவிடுமாறுவேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இந்நிலையில்வேளாண பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு 1.7.2020 முதல் 28.10.2020 வரை தண்ணீ ர் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டம் ஆகியவற்றில் உள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். மேலும், விவசாய பெருமக்கள் நீரைசிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
பவானிசாகர் அணை; இன்று முதல் ஜூலை 28ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு