சென்னை , ஜூலை 17தமிழகத்தில்மின்கட்டண உயர்வை கண்டித்துவரும் ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதுதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்பிஎம்எல்ஏக்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வீடியோ கான்பான்சிங் மலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில்பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுஅவை பின்வருமாறு: *கொரோனா நோய்த் தொற்று தீவிரமாகப் பரவிவருவதைத்தடுக்கவும்மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். *பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர்க்கு மருத்துவக் கல்வியில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். * நீட்தேர்வை ரத்துசெய்து பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களைச் சேர்த்திட வேண்டும் *ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலையில்விரைந்து நீதி கிடைக்க வேண்டும்! * விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தைரத்து சட்டம் 2020”ஐத்திரும்பப் பெற வேண்டும். * கூட்டுறவு வங்கிகளைரிசர்வ்வங்கியிடம் தாரைவார்க்க கூடாது! * மாணவர்களின் இறுதி செமஸ்டரைரத்து செய்ய வேண்டும் *தி.மு.க. வெற்றிபெற்ற உள்ளாட்சி அமைப்புகளைப் புறக்கணிக்கும் அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம்! * திருப்போரூர் கழக எம்.எல்.ஏ.மீதான பொய் வழக்கிற்கு கண்டனம்! ண்டனம்! புலனாய்வைசி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற வேண்டும் * வீட்டைவிட்டு வெளியே போனால் அபராதம்; வீட்டிற்குள்ளே இருந்தால் அநியாயமின்கட்டணமா? அ.தி.மு.க. அரசை எதிர்த்து மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டம்: ஊரடங்கைப்பிறப்பித்தது மக்கள் வெளியில்போனால் கோடிக்கணக்கான ரூபாயை அபராதமாக வசூலித்தது ஆயிரக்கணக்கான வாகனங்களை பறிமுதல் செய்தது எல்லாம் அ.தி.மு.க. அரசு. ஆனால், ஊரடங்குகால மின்கட்டணத்தை குறைக்கக் கோரினால் மட்டும்,"நீங்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளீர்கள்; அதெல்லாம்கட்டணத்தைக் குறைக்க முடியாது” என்று மக்கள் மீதே பழிசுமத்துவதும் அ.தி.மு.க. அரசே! தவறான கணக்கீடுகளின் அடிப்படையில் ஏற்பட்ட அதிகமின்கட்டணத்தைஎல்லாத் தரப்பிலும் எவ்வளவோ எடுத்துரைத்தும் ஏற்காமல், அனைத்துத்தரப்பு மக்களையும் பெருந்துயரத்திற்கு உள்ளாக்கியுள்ள அ.தி.மு.கஅரசுக்கு மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கனின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைக் தெரிவித்துக் கொள்கிறது. ஊரடங்குகாலகட்டத்தில் யாருக்கும் வேலையும் இல்லை; யாருக்கும் வேலையும் இல்லை: சம்பளமும் இல்லை;தொழிலும் இல்லை;வருமானமும் இல்லை. மின்சாரச்சட்டத்திலேயே "நுகர்வோருக்கு நியாயமான மின்கட்டணத்தைவழங்குவது மிக முக்கியம்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளதுதமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரியமே அச்சட்டத்தின்கீழ்தான் இயங்குகிறது. ஆகவேகொரோனா காலத்தை "சிறப்பு நேர்வாக”க் கருதி மின்கட்டணச் சலுகை அளிப்பதில் அ.கி.ம.க. அரசுக்கு எவ்வித தடையும் இல்லை . மத்திய பிரதேசம்கேரளம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களே கொரோனா காலமின்கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், அ.தி.மு.க. அரசு மட்டும் முறையாகவே கணக்கிட்டுள்ளோம் என்று உயர்நீதிமன்றத்தின் முன்பு வாதாடிவிட்டு, இப்போது அதையே விளக்கமாக செய்திக்குறிப்பு” ஒன்றைக் கொடுத்திருப்பது பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பற்றி கவலைகொள்ளாத கருணையற்றபோக்காகும். ஆகவே , அ.தி.மு.க. அரசின் இந்தக் கருணையற்ற போக்கைக் கண்டித்தும், 'ரீடிங்' எடுத்ததில் உள்ள குழப்பங்களை மின் நுகர்வோருக்கு சாதகமான முறையில் கணக்கிட்டு ஊரடங்குகால மின்கட்டணத்தை குறைக்கக் கோரியும் குறிப்பாக, முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதில் அந்தத்தொகைக்குரிய "யூனிட்டுகளை” கழிக்க வலியுறுத்தியும், அப்படிக் குறைக்கப்பட்ட மின்கட்டணக்கை எளிய மாதத்தவணைகளில் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்க கோரியும் வரும் 217 2020(செவ்வாய்க்கிழமை) அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பு கறுப்பு கொடி ஏற்றுவதோடு, கண்டன முழக்கங்களை எழுப்பிப்போராடுவது என்று மாவட்டச்செயலாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது
மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21-ல் தி.மு.க, ஆர்ப்பாட்டம்